Sunday 2 December 2012
Saturday 10 November 2012
Monday 5 November 2012
Sunday 4 November 2012
Thank you my friend- Tamil Poem
நன்றி நண்பா !
நண்பா !....
நட்பால் நெருங்கினோம் !....
காதலால்
காட்சிப் பொருள்
ஆனோம் !...
நேசத்தால் இணைந்தோம் !...
பந்தங்களின் பாசத்தால்
பிரிந்தோம் !.....
உனக்கென ஒரு வாழ்க் கை
அதில் இன்று வேறுஒரு துணை ?...
வாழ்த்துக்கள் நண்பா !...
எனக்கும் ஒரு வாழ்க் கை இருப்பதை
நினைவு படுத்தினாய்! ..
நன்றி நண்பா !...
நானும் வாழ்ந்துகாட்டுவேன் !..
உன்னை மறந்து
என்னை நினைந்து ..
சந்தோஷமாய் வாழ்வேன் ....
உற்றதுணை யுடன் நானும் !.....
என்னை எனக்கு புரியவைத்தாய் !....
நன்றி நண்பா !......
Wednesday 31 October 2012
ஒரு தலை காதல்
என் உயிரே ......
என்னுள்ளம் ஏக்கத்தில் தவிக்குதே !..
நீஇன்றி நான் இல்லை என்ற நிலையி ல்
என்மீது உனக்கேன் இரக்கம் பிறக்கவில்லை ?......
காதலில் காத்திருப்பது ஒரு சுகமாம் !...
எனக்கு மட்டும் ஏன் அது ஒரு நரகமாய் ?...
பொய்யாகக் கூட ஒரு புன்னகை
சிந்தாமல் புறக்க ணி த்தல் சரியோ ?
தவம் கிடக்கிறேன் நானும் .....
உன் வாயிலிருந்து ஒரு வார்த்தை
வருமென்று ......
தினம் தினம் நான்
செத்து செத்து பிழைக்கிறேன் ....
மெழு கா ய் உருகி ..
முள் மீது தூங்கி .....
ஒரு தலையாய் காதலில்
எத்தனை நாள் நானும் வாழ்வேன் ?..
மடிந்து போ !என்று சொன்னாலும் பரவா யில்லை .....
மறந்துபோ !என்று சொல்லிவிடாதே !...
முகத்தை காட்டிவிடு !..
முடிவை சொல்லி விடு !..
இனிமேலாவது என்னை வாழவிடு !......
கைம்பெண்ணின் கவிதை
காதலர் தினத்தன்று
காதலுடன் நீங்கள் தந்த ரோஜா
காய்ந்த சருகாய் இன்றும் என்
காதல் புத்தகத்தில் ......
அதை கொடுத்த நீங்கள் எங்கே ?
மரணமென்பது ஆற்றமுடியாத
ரணம் உண்மைதான் !
கரைந்தது உங்கள் சாம்பல் மட்டுமே !
கரையாமல் இன்றும் வாழ்வது உங்கள் நினைவுகள் மட்டுமே !
துயரம் துரத்தினாலும்
கவலை வாட்டினாலும்
கலங்காது நிற்பேன் !
நீங்கள்
என் உயிரோடு
கலந்திருப்பதால் !
கண்ணீரை மறைத்து
கனத்த இதயத்தோடு
வாழ்கிறேன் நானும் ....
நம் குழந்தைகளுக்காக ....
ஆணின் காதல்
தோற்றாலும் ஜெயித்தாலும்
அதுஒரு சரித்திரம் !
பெண்ணின்காதலோ
அவளுக்குள் தோன்றி ,
அவளுடன் வாழ்ந்து ,
அவளோடுமடியும் ஒரு காவியம் !
தாய் சுமந்தாள் பத்து மாதம்
நான் சுமப்பேன் உங்களை
என் இதயத்தில் .....,
என் இறுதி மூச்சு
நிற்கும் வரை !...
Friday 26 October 2012
Wednesday 24 October 2012
Monday 22 October 2012
God has no religion
A suitable quote that I found in "brainy quotes" website:
I love you when you bow in your mosque, kneel in your temple, pray in your church. For you and I are sons of one religion, and it is the spirit.
Khalil Gibran
Sunday 21 October 2012
Friday 19 October 2012
Thursday 18 October 2012
Subscribe to:
Posts (Atom)