Wednesday 31 October 2012

கைம்பெண்ணின்  கவிதை 


காதலர் தினத்தன்று 

காதலுடன் நீங்கள் தந்த ரோஜா 

காய்ந்த சருகாய் இன்றும் என் 

காதல் புத்தகத்தில் ......

அதை கொடுத்த நீங்கள் எங்கே ?

மரணமென்பது ஆற்றமுடியாத 

ரணம் உண்மைதான் !

கரைந்தது உங்கள் சாம்பல் மட்டுமே !

கரையாமல் இன்றும் வாழ்வது உங்கள் நினைவுகள் மட்டுமே !

துயரம் துரத்தினாலும் 

கவலை வாட்டினாலும் 

கலங்காது நிற்பேன் !

நீங்கள் 

என் உயிரோடு 

கலந்திருப்பதால் !

கண்ணீரை மறைத்து 

கனத்த இதயத்தோடு 

வாழ்கிறேன் நானும் ....

நம் குழந்தைகளுக்காக ....

ஆணின் காதல் 

தோற்றாலும் ஜெயித்தாலும் 

அதுஒரு சரித்திரம் !

பெண்ணின்காதலோ 

அவளுக்குள் தோன்றி ,

அவளுடன் வாழ்ந்து ,

அவளோடுமடியும் ஒரு காவியம் !

தாய் சுமந்தாள் பத்து மாதம் 

நான் சுமப்பேன் உங்களை 

என் இதயத்தில் .....,

என் இறுதி மூச்சு 

நிற்கும் வரை !...


No comments:

Post a Comment